மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் தலைநகர் தில்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகத்தில் டிசம்பர் 7-8 தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
வங்க தேச நிலைமை
வங்க தேசத்தில் வாழும் மதச் சிறுபான்மை யினருக்கு வங்க தேச இடைக்கால அர சாங்கமும், அதிகாரிகளும் முழுமை யான அளவில் பாதுகாப்பினை உத்தரவாதப் படுத்திட வேண்டும் என்பதை அரசியல் தலைமைக் குழு மீண்டும் வலியுறுத்துகிறது. இது தொடர்பாக நிர்வாகம், இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளின் நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது போன்றே தோன்றுகிறது. அதே சமயத்தில், இந்தியா வில் ஆர்எஸ்எஸ்/பாஜக மற்றும் இந்துத்துவாவின் பல்வேறு அமைப்புகள் மதவெறித் தீயை விசிறி விடும் விதத்தில் முயற்சிகளை மேற்கொண்டு வருவ தையும் அரசியல் தலைமைக்குழு கண்டிக்கிறது. இவர்களின் இத்தகைய அணுகுமுறை வங்க தேசத்தில் வாழ்ந்துவரும் சிறுபான்மையினரின் நலன்களுக்கு உதவாது. இரு நாடுகளிலும் வாழும் மக்களின் நலன்க ளுக்கு ஊறு விளைவித்திடும் விதத்தில் பரப்பப்படு கின்ற மதவெறியின் அனைத்து வடிவங்களுக்கு எதிராகவும் இரு நாடுகளிலும் உள்ள மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் வலுவாகக் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அரசியல் தலை மைக்குழு அறைகூவி அழைக்கிறது.
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை அமல்படுத்துக!
இன்றைய தினம் பல நூறு ஆண்டு காலமாக இருந்து வரும் பழைய மசூதிகள் உள்ள இடங்களில் கோவில்கள் இருந்ததா கக் கூறி கீழமை நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்படும் போக்கு அதிகரித்து வருவது தொடர்பாக அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. வாரணாசி மற்றும் மதுராவை அடுத்து, சம்பலில் 16ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதியை ஆய்வு செய்திட கீழமை நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் நான்கு முஸ்லிம் இளை ஞர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இதேபோன்ற மனுக்கள் ஆஜ்மீரில் உள்ள ஷரீப் தர்கா சம்பந்தமாகவும் சிவில் நீதி மன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்டி ருக்கின்றன.
உச்சநீதிமன்றம்
தலையிட வேண்டும்
1991ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஷரத்துகள்) சட்டத்தினை உயர்த்திப் பிடித்து, இதுபோன்று மனுக்கள் தாக்கல் செய் யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்திட உச்சநீதி மன்றம் தலையிடாமல் இருப்பது துரதிர்ஷ்டமா கும். 2019 ஆம் ஆண்டு ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வாயம் அயோத்தி தாவாவில் இந்தச் சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மையையும் அதன் அமலாக்கத்தையும் (validity andenforce ment) திட்டவட்டமாக உயர்த்திப்பிடித்து தீர்ப்ப ளித்திருக்கிறது. இந்தத் திசைவழியில் இப்போ துள்ள உச்சநீதிமன்றமும் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஷரத்துகள்) சட்டத்திற்குப் புறம்பான முறையில் கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுவரும் மனுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடக்கூடிய விதத்தில் தலையிட வேண்டும்.
வயநாடு நிவாரணத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கிடுக!
வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவியை ஒன்றிய அரசாங்கம் கேரளாவிற்கு வழங்காமல் மறுத்து, தொடர்ந்து அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டு வருவதை அரசியல் தலைமைக்குழு கடுமையாக விமர்சிக்கிறது. மாநில அரசாங்கம் உடனடி நிவாரணத்திற்காக 214.68 கோடி ரூபாயும், விரிவான மீட்பு மற்றும் சீரமைப்புக்காக 2,319.1 கோடி ரூபாயும் கோரியிருந்தபோதிலும், ஒன்றிய அரசாங்கம் நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த நிதியும் ஒதுக்கிடவில்லை.
நிலச்சரிவை “கடுமையான இயற்கை பேரிடர்” என்று வகைப்படுத்த மறுப்பதும், பாதிக்கப்பட்ட குடும்பங்க ளுக்கான கடன்களை தள்ளுபடி செய்ய விரும்பாததும் ஒன்றிய அரசாங்கத்தின் அநீதி மற்றும் மனிதாபி மானமற்ற அணுகுமுறையை ஆழமானமுறையில் பிரதிபலிக்கின்றது. ஒன்றிய அரசாங்கம் நெருக்கடி காலங்க ளில் கூட இவ்வாறு உதவிடாமல், கூட்டாட்சித் தத்துவத்தையே அரித்து வீழ்த்திக்கொண்டிருக்கிறது. எனவே மாநில அரசாங்கம் கோரியுள்ள தொகையை உடனடியாக விடுவிக்குமாறு ஒன்றிய அரசாங்கத்தை அரசியல் தலைமைக்குழு கேட்டுக்கொள்கிறது.
நொய்டா விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு
உத்தரப்பிரதேசம் கிரேட்டர் நொய்டா வில் போராடிவரும் விவசாயிகள் மீது காவல்துறையினர் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் இதர அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 150 தலைவர்களும் முன்னணி செயல் வீரர்களும் சிறையில் அடைக்கப்பட்டி ருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட விவசாயிகள் சிறையில் பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கி றார்கள். பல முன்னணி வீரர்களை வீட்டுக் காவலில் வைத்திருப்பதும் தொடர்கிறது. போராட்டத்தில் முன்னணியில் நின்று போராடிய பெண்கள் மீதான தாக்கு தல்களும் அதிர்ச்சியளிக்கிறது.
அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும்
45 கிராமங்களைச் சேர்ந்த விவசா யிகளின் கிரேட்டர் நொய்டா போராட் டம், ரியல் எஸ்டேட் திட்டங்களுக்காக நீண்டகாலமாக கையகப்படுத்தப் பட்ட நிலங்களைப் பற்றியதாகும். இழப்பீடு விகிதத்தை சீரமைக்க வேண்டும், 1997இல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி விவசாயிகளுக்கு மனைகள் ஒதுக்கீடு செய்ய வேண் டும், கட்டாய வேலைவாய்ப்பு கொள் கையை அமல்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் போராட்டத்திற்குத் தன் முழு ஆதரவினை அளிக்கிறது. போராடும் விவசாயிகள் மீதான அடக்குமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அர சாங்கம் ஏற்று அமல்படுத்திட வேண்டும் என்றும் கோருகிறது.
கட்சியின் அகில இந்திய மாநாடு தயாரிப்புப் பணிகள்
2025 ஏப்ரல் முதல் வாரத்தில் நடை பெறவுள்ள கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டிற்கான வரைவு அரசியல் தீர்மானம் அரசி யல் தலைமைக்குழுவில் விவாதிக்கப்பட்டது. அர சியல் தலைமைக்குழு வில் நடைபெற்ற விவாதத் தின் அடிப்படையில் வரைவு அடுத்து கொல் கத்தாவில் 2025 ஜனவரி 17-19 தேதிகளில் நடை பெறவுள்ள மத்தியக் குழுக் கூட்டத்தில் நிறை வேற்றுவதற்காக முன் வைக்கப்படும்.
தமிழில் : ச.வீரமணி